என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் முகாமில் 9,320 பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்27 Dec 2021 9:35 AM GMT (Updated: 27 Dec 2021 9:35 AM GMT)
துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரி, அரசு பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் தாலுகாவில் 16-ம் கட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரி, அரசு பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 16-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை ஒன்றிணைத்தனர் .
தடுப்பூசி சிறப்பு முகாமை திருப்பூர் பல்லடம் தாசில்தார் தேவராஜ், நகராட்சி ஆணையாளர் விநாயகம், வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பல்லடம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 9,320 பேர் ஆர்வமுடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X