என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் தீயில் கருகிய இளம்பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்27 Dec 2021 7:41 AM GMT (Updated: 27 Dec 2021 7:41 AM GMT)
மோகன்குமார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அபிநயாவை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 34). இவரது மனைவி அபிநயா(25). இவர் கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை தீக்குச்சியால் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென அபிநயா அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்து விட்டது.
உடனே இதை கவனித்த கணவர் மோகன்குமார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அபிநயாவை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று இறந்தார்.
அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X