search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சீனாவுக்கு அமெரிக்கா தடை - திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு

    தற்போது சீனா சின்ஜியானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முடிவுக்கு, அமெரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    திருப்பூர்:

    சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில் காலம் காலமாக சீனா கோலோச்சி வருகிறது. கொரோனா பரவலுக்குப்பின் உலக நாடுகள் மத்தியில் சீனாவின் மதிப்பு குறைந்துள்ளது. 

    இதனால் பெரும்பாலான நாடுகள் சீனாவுக்கு மாற்றாக இந்தியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளில் இருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்க தொடங்கிவிட்டன. இதனால் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

    இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது:

    தற்போது சீனா சின்ஜியானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் முடிவுக்கு, அமெரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளும் சீன பொருட்கள் புறக்கணிப்பை படிப்படியாக செயல்படுத்தி வருகின்றன. கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில் சீனா எதிர்ப்பை சந்தித்துள்ளது.

    இதனால் சர்வதேச வர்த்தகர்கள் சீன நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதை குறைத்து வருகின்றனர். மூலப்பொருள் தேவைக்கு பிற நாடுகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாவதால் சீனாவின் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரிக்கும். 

    இதனால் அந்நாட்டின் போட்டி திறன் குறையும். இது இந்தியா, வியட்நாம் நாடுகளின் ஆடை ஏற்றுமதி துறைக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத் தரும். இதன் மூலம் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    மத்திய அரசு பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மூலப்பொருட்களுக்கு பதில் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வதன் வாயிலாக நாட்டுக்கு அன்னிய செலாவணி அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும் என்றார்.
    Next Story
    ×