search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

    திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்கிற சாந்தகுமார் (வயது 38). இவர் டைல்ஸ் வேலை மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி மேகலா என்கின்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தகுமார் நேற்று திருப்பத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அது மட்டுமன்றி சாந்தகுமாரின் உடலில் ரெயிலில் அடிபட்டது போல் காயங்கள் இல்லை என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்படும் என கூறினர். மேலும் அவர்களது உறவினர்கள் சாந்தகுமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×