search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரியகுளம் அருகே தொழிலாளி தற்கொலை

    பெரியகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 51). கூலித்தொழிலாளி. இவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22-ந்தேதி விஷம் குடித்து அந்த பகுதியில் சாலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×