என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் நூற்பாலையில் தீ விபத்து- பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
Byமாலை மலர்24 Dec 2021 11:04 AM GMT (Updated: 24 Dec 2021 11:04 AM GMT)
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் திருச்சி-கோவை சாலையில் காடையூரான்வலசு அருகே தனியாருக்கு சொந்தமான நூல் நூற்பாலை உள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.
இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட வட மாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பகல் பஞ்சு அடுக்கி வைத்திருந்த கட்டிடத்தில் திடீரென புகை வந்துள்ளது.
இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
அப்போது தீ கட்டுக்குள் அடங்காததால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காங்கேயம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வாகனங்களுக்கு உதவியாக வெள்ளகோயில் மற்றும் காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து உதவி செய்தனர். இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான கட்டிடம் மற்றும் பஞ்சுகள் எரிந்து நாசமாயின.
பகலில் பிடித்த தீயை நேற்று இரவு வரை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X