என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நளினிக்கு ஒரு மாதம் பரோல்- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Byமாலை மலர்23 Dec 2021 8:25 AM GMT (Updated: 23 Dec 2021 8:25 AM GMT)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளி விட கோரி சென்னை ஐகோர்ட்டில் அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் முடிவு செய்து, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் என்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், என்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.
இதுகுறித்து கடந்த மே மாதம் மற்றும் ஆகஸ்டு மாதம் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. எனவே, நளினிக்கு பரோல் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளி விட கோரி சென்னை ஐகோர்ட்டில் அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் முடிவு செய்து, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் என்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், என்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.
இதுகுறித்து கடந்த மே மாதம் மற்றும் ஆகஸ்டு மாதம் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. எனவே, நளினிக்கு பரோல் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘பத்மாவின் மனுவை அரசு பரிசீலித்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது’’ என்று கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்... 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா சாதனை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X