என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாணவர்கள்-டிரைவர் மோதல்: பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்
Byமாலை மலர்22 Dec 2021 12:13 PM GMT (Updated: 22 Dec 2021 12:13 PM GMT)
போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை மேலூர் செல்வதற்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. அதில் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியவாறு வந்தனர். இதனை பலமுறை நடத்துநர் கண்டித்தார்.
மாணவர்கள் பஸ்சுக்குள் வருவதற்கு மறுத்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.மாட்டுதாவணி பஸ் நிலையம் வந்தவுடன் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X