search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

    பணியில் இருந்த டெக்னீசியன் ஜானகி, டிரைவர் சீதையன் பிரசவம் பார்த்தனர்.
    திருப்பூர்:

    காங்கயத்தை சேர்ந்தவர் விக்னேஷ், கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    உயர் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அவிநாசிபாளையம் அருகே வந்த போது கலைவாணிக்கு பிரசவ வலி அதிகமாகியது. இதையடுத்து பணியில் இருந்த டெக்னீசியன் ஜானகி, டிரைவர் சீதையன் பிரசவம் பார்த்தனர். அதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவ கல்லூரி மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
    Next Story
    ×