என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்காயம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்20 Dec 2021 10:29 AM GMT (Updated: 20 Dec 2021 10:29 AM GMT)
ஆலங்காயம் பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை சில நபர்கள் கூடுதல் விலைக்கு விற்று வருவதாக ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், நேற்று ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 40) என்பதும், அவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், படகுப்பம் பகுதியில் மது விற்ற, அரசு (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X