search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கங்கைகொண்டானில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    கங்கைகொண்டானில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள பால் கணபதியா புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் ஒரு புண் ஏற்பட்டது. அதன் வலி தாங்க முடியாமல் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த முத்துப்பாண்டி சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×