search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் நாசர்
    X
    அமைச்சர் நாசர்

    அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம்

    திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்குகிறார்.


    திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் நாளை 20-ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கே. கெஸ்ட் ஹவுஸ்சில் நடைபெறுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்குகிறார்.

    இக்கூட்டத்தில் முன்னதாக திருவள்ளூர் தெற்கு ஒன்றி கழக செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றுகிறார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு இணைச் செயலாளர் கே.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், ஒன்றிய நகர எல்லாபுரம் எம்.குமார், ஜி.விமல் வர்சன், ஜெ.மகாதேவன், மாநகர ஒன்றிய நகர பேரூர கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×