என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
16 வயது சிறுமிக்கு திருமணம்- வாலிபர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்18 Dec 2021 11:26 AM GMT (Updated: 18 Dec 2021 11:26 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 20). கூலித்தொழிலாளி.
இந்தநிலையில் இவருக்கும் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தினர். இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுமி கோவை மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததும், திருமணத்துக்குப் பிறகு அவரை கட்டாயப்படுத்தி வீரக்குமார் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு அதிகாரி புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் வீரக்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து வீரக்குமாரின் பெற்றோர், மீதும் குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வீரக்குமார், அவரது தந்தை மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 20). கூலித்தொழிலாளி.
இந்தநிலையில் இவருக்கும் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தினர். இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுமி கோவை மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததும், திருமணத்துக்குப் பிறகு அவரை கட்டாயப்படுத்தி வீரக்குமார் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு அதிகாரி புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் வீரக்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து வீரக்குமாரின் பெற்றோர், மீதும் குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வீரக்குமார், அவரது தந்தை மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X