என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்18 Dec 2021 8:24 AM GMT (Updated: 18 Dec 2021 8:24 AM GMT)
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
பென்னாகரம் அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருடைய மனைவி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் சிங்காரம் அங்குள்ள பார்வையாளர் காத்திருக்கும் அறையில் செல்போனை சார்ஜரில் பொருத்தி விட்டு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் மற்றும் சிலர் அவரை விரட்டி பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் பாலக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜமீல் (வயது 32) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X