
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கேக்குகளை தயாரித்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து விடுதி மேலாளர் பவன் கூறும்போது, சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் இதனை தயாரித்துள்ளோம். தயாரிக்க விடுதி உணவக ஊழியர்கள் கைவண்ணத்தில் 7 நாட்கள் ஆனது. 150 கிலோ எடையுள்ள 8000- ஜிஞ்சர் பிஸ்கட்கள் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 அடி உயர தொங்கும் கிறிஸ்துமஸ் மரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி பயன்படுத்தி சமூக இடைவெளியை பின்பற்றி வரும் புத்தாண்டு ஜனவரி முதல் வாரம் வரை இதை அனைவரும் பார்வையிட்டு மகிழலாம் எனவும் தெரிவித்தார்.