search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் விற்கப்படும் கோல மாவை ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்
    X
    சாலையில் விற்கப்படும் கோல மாவை ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்

    சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ள கோல மாவு- ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்

    விழுப்புரத்தில் சாலையோரங்களில் வைத்து கோலமாவு விற்பனை நடந்தது. இதை ஆர்வமுடன் பெண்கள் வாங்கி சென்றனர்.
    விழுப்புரம்:

    வீதியெங்கும் வண்ண வண்ண கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகளாகும். தேவர்களை வரவேற்கும் விதமாக இம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து வண்ண கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு கோலம் போடுவதால் மனதில் மகிழ்ச்சி பொங்குவதோடு மகாலட்சுமியின் அருளும் பூரணமாக கிட்டும் என்பது மட்டுமின்றி கோலங்கள், தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.

    இதையொட்டி விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி வீதியாக வாகனங்களில் வண்ண கோல மாவு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் ஆங்காங்கே சாலையோரங்களிலும் வண்ண கோல மாவினை சாக்கு மூட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ கோல மாவு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.
    Next Story
    ×