என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ள கோல மாவு- ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்
Byமாலை மலர்16 Dec 2021 9:51 AM GMT (Updated: 16 Dec 2021 9:51 AM GMT)
விழுப்புரத்தில் சாலையோரங்களில் வைத்து கோலமாவு விற்பனை நடந்தது. இதை ஆர்வமுடன் பெண்கள் வாங்கி சென்றனர்.
விழுப்புரம்:
வீதியெங்கும் வண்ண வண்ண கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகளாகும். தேவர்களை வரவேற்கும் விதமாக இம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து வண்ண கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு கோலம் போடுவதால் மனதில் மகிழ்ச்சி பொங்குவதோடு மகாலட்சுமியின் அருளும் பூரணமாக கிட்டும் என்பது மட்டுமின்றி கோலங்கள், தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.
இதையொட்டி விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி வீதியாக வாகனங்களில் வண்ண கோல மாவு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் ஆங்காங்கே சாலையோரங்களிலும் வண்ண கோல மாவினை சாக்கு மூட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ கோல மாவு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.
வீதியெங்கும் வண்ண வண்ண கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகளாகும். தேவர்களை வரவேற்கும் விதமாக இம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து வண்ண கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு கோலம் போடுவதால் மனதில் மகிழ்ச்சி பொங்குவதோடு மகாலட்சுமியின் அருளும் பூரணமாக கிட்டும் என்பது மட்டுமின்றி கோலங்கள், தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.
இதையொட்டி விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி வீதியாக வாகனங்களில் வண்ண கோல மாவு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் ஆங்காங்கே சாலையோரங்களிலும் வண்ண கோல மாவினை சாக்கு மூட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ கோல மாவு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X