என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பழிவாங்கும் செயல்- பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்16 Dec 2021 9:32 AM GMT (Updated: 16 Dec 2021 10:38 AM GMT)
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சைக்கு இன்று காலை வந்த பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது. உடனடியாக போதை பொருள் விற்பனையை தடை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல் லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் இதுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதில் என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ரெய்டு நடத்துவது என்பது ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக அமைந்துள்ளது. அது தேர்தல் காலம் ஆகவோ அல்லது தேவைப்படும் காலமாகவோ இருக்க முடியும் என தி.மு.க அரசு காத்துக் கொண்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கைவிட்டுவிட வேண்டும். சேர்த்து வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது கண்ணியமான செயல் அல்ல என்னை பொறுத்தவரை ரெய்டு நடத்துவது என்பதை பழிவாங்கும் செயலாகத்தான் பார்க்கிறேன்.
தஞ்சைக்கு இன்று காலை வந்த பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது. உடனடியாக போதை பொருள் விற்பனையை தடை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல் லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் இதுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதில் என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ரெய்டு நடத்துவது என்பது ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக அமைந்துள்ளது. அது தேர்தல் காலம் ஆகவோ அல்லது தேவைப்படும் காலமாகவோ இருக்க முடியும் என தி.மு.க அரசு காத்துக் கொண்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கைவிட்டுவிட வேண்டும். சேர்த்து வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது கண்ணியமான செயல் அல்ல என்னை பொறுத்தவரை ரெய்டு நடத்துவது என்பதை பழிவாங்கும் செயலாகத்தான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X