search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    லால்குடி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து விருத்தாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழமணக்காலில் தண்டவாளத்தில் வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.

    பின்னர் விசாரணை செய்ததில் இவர் முள்ளால் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வசந்த் (25)என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×