என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை- வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்த 121 பேர் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்16 Dec 2021 6:48 AM GMT (Updated: 16 Dec 2021 6:48 AM GMT)
வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்து 8 நாட்கள் நிறைவடைந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் கோவை, திருச்சி, சென்னை விமான நிலையம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் வெளிநாடு பயணிகள் குறித்த விவரம் மாவட்ட சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதன்படி டிசம்பர் மாத தொடக்கம் முதல் தற்போது வரை 121 பேர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டம் வந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்து 8 நாட்கள் நிறைவடைந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் ‘நெகட்டிவ்’ வந்துள்ளது.
யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மீதமுள்ளவர்கள் அவரவர் வந்த நாட்கள், ஒரு வாரம் நிறைவை கணக்கிட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை அவர்கள் வீட்டு தனிமையிலேயே கண்காணிக்கப்படுவார்கள் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X