என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்னை உற்பத்தி மானியம் - உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டுகோள்
Byமாலை மலர்16 Dec 2021 6:34 AM GMT (Updated: 16 Dec 2021 6:34 AM GMT)
விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்களுடன் உழவு மானியமும் சேர்த்து 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
உடுமலை:
தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்வரின் 10 ஆண்டு தொலை நோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தென்காசி, திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் என்ற பெயரில் இத்திட்டம் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்களுடன் உழவு மானியமும் சேர்த்து 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறுமாறு அரசு அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X