என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதியம்புத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை
Byமாலை மலர்15 Dec 2021 10:35 AM GMT (Updated: 15 Dec 2021 10:35 AM GMT)
புதியம்புத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியம்புத்தூர்:
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீபராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 26). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மகன் மூளை வளர்ச்சி குன்றி, கை மற்றும் கால்கள் செயல்படாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் குடித்துள்ளார்.
உடனே அவரது கணவர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீபராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 26). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மகன் மூளை வளர்ச்சி குன்றி, கை மற்றும் கால்கள் செயல்படாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் குடித்துள்ளார்.
உடனே அவரது கணவர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X