search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    தர்மபுரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே ராக்கிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 52). அதே பகுதியை சேர்ந்தவர் அருள் (40). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். மாதம்மாளுக்கும், அருளுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்ற தகராறில் கல்லால் தாக்கப்பட்ட அருள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து மாதம்மாள் அவரது மகன் வெங்கடேசன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக மாதம்மாளின் இளைய மகன் சீனிவாசனை (29) தேடி வந்தனர். இந்தநிலையில் திப்பம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த அவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×