search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி 54 ஆயிரத்து 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 17 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 64 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இம்மாவட்டத்தில் 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 53,082 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 516 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 466 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×