என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை தொடர்கிறது- 30 கிலோ போதை சாக்லெட்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்14 Dec 2021 3:24 AM GMT (Updated: 14 Dec 2021 3:24 AM GMT)
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் பறிமுதல் வேட்டை தொடர்வதாகவும், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ போதை சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.
சென்னை:
போதைப்பொருட்கள் விற்பனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 324 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ரூ.164 கோடி மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2,983 பேர் கைதாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதை சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், 134 பேர் சிக்கினார்கள்.
போதைப்பொருட்கள் விற்பனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 324 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ரூ.164 கோடி மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2,983 பேர் கைதாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதை சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், 134 பேர் சிக்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X