என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு- கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக புகார்
Byமாலை மலர்12 Dec 2021 8:41 AM GMT (Updated: 12 Dec 2021 8:41 AM GMT)
பா.ஜ.க.வின் 21 நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக கவர்னருடனான சந்திப்புக்கு பின் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
சென்னை:
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். கிண்டி ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் சென்று இருந்தனர்.
இந்த சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. அப்போது தமிழக அரசு, பா.ஜ.க. மற்றும் மாரிதாஸ் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை கவர்னரிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. முதல்-அமைச்சரை பாராட்டினால் இனிக்கிறது. குற்றம் சாட்டினால் கசக்கிறது. தேச தலைவர்களை, தேசத்தை தவறாக பதிவிடும் பதிவுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்திய தேசத்தை குறை கூறி பதிவு செய்பவர்களுக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவாக பதிவுகளை செய்கின்றனர். பா.ஜ.க.வின் 21 நிர்வாகிகள் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நியாயமான கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தி.மு.க.வுக்கு எதிரான 300-க்கும் மேற்பட்ட பதிவுகளின் நகல்கள் கவர்னரிடம் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். கிண்டி ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் சென்று இருந்தனர்.
இந்த சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. அப்போது தமிழக அரசு, பா.ஜ.க. மற்றும் மாரிதாஸ் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை கவர்னரிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து கரு. நாகராஜன் கூறியதாவது:-
இந்திய தேசத்தை குறை கூறி பதிவு செய்பவர்களுக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவாக பதிவுகளை செய்கின்றனர். பா.ஜ.க.வின் 21 நிர்வாகிகள் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நியாயமான கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தி.மு.க.வுக்கு எதிரான 300-க்கும் மேற்பட்ட பதிவுகளின் நகல்கள் கவர்னரிடம் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X