என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே வீட்டின் முன்பு கற்களை கொட்டிய வாலிபர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்11 Dec 2021 9:56 AM GMT
தகராறு செய்த வாலிபர் நேற்று லாரி மூலம் கற்களைக் கொண்டுவந்து விஸ்வநாதன் வீடு அருகே கொட்டியுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). விவசாயி. இவரது வீடு அருகே வசிக்கும் வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் மேற்கூரையில் கண்காணிப்பு கேமராக்களை மாட்டி உள்ளார். விசுவநாதன் வாடகைக்கு சில வீடுகளை கட்டியுள்ளார் அதில் வடமாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வீட்டில் உள்ள பெண்கள் குளியலறையை பார்த்து கேமரா உள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து விஸ்வநாதன் அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார்.
இதனால் அவரிடம் தகராறு செய்த அந்த வாலிபர் நேற்று லாரி மூலம் கற்களைக் கொண்டுவந்து விஸ்வநாதன் வீடு அருகே கொட்டியுள்ளார்.
மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து விஸ்வநாதன் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X