search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர்
    X
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர்- கொளத்தூர் தொகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
    சென்னை :

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    கனமழை தொடங்கிய நாள் முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில், இன்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கொளத்தூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.
    Next Story
    ×