search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
    X
    இந்து முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி - ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    திருப்பூரிலும் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருப்பூர்:

    குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13பேர் பலியாகினர். அவர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் ,அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    திருப்பூரிலும் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் அ.தி.மு.க. தென்னம்பாளையம் பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமையில், உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் குமரன் சிலை முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதேப்போல் மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிவசேனா கட்சி சார்பில் சிவசேனா இளைஞரணி மாநில தலைவர் அட்சயாதிருமுருக தினேஷ் தலைமையில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநகர ஆலோசகர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மீன் வியாபாரிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் கோடை சே.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் முகமதுஅலி உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

    இந்தநிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்து, ஒருங்கிணைப்பாளர் அமிது, மாநகரத் தலைவர் ஜபருல்லா,  மாவட்ட அமைப்பு செயலாளர் கனகசெல்வம், செயற்குழுஉறுப்பினர் தேவேந்திரன், இணைசெயலாளர் செல்வா, சேக்முகமது, ராமர், மாநகரத் துணைதலைவர் திருநாவுகரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    மேலும் மாநகரசெயலாளர் ரகுமத்துல்லா, மாநகரத்துணை செயலாளர் கணேசமூர்த்தி ,மாநகரபொருளாளர் ராஜாமுகமது, மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி, பல்லடம் நகரதலைவர் மஹாராஜன், நகரச் செயலாளர் மாணிக்கம், நகரபொருளாளர் பவுன்ராஜா, மாவட்ட செயற்குழு அப்துல்ரகிம், கனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கே.கோபிநாத் தலைமையில் திருப்பூர் பழைய ஆர்டிஓ.அலுவலகம் முன்பு விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மாநில இளைஞரணி தலைவர் தாமோதரன், மாநில அமைப்பாளர் ஏ. எஸ். மணிகண்டன் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட துணைத்தலைவர் உதயா, மாவட்ட செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத், திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், மற்றும் நவீன், மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
    Next Story
    ×