என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
Byமாலை மலர்9 Dec 2021 6:34 AM GMT (Updated: 9 Dec 2021 6:34 AM GMT)
பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு அளிக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு அளிக்கப்படுகிறது.
அவ்வாறான போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவரின் போட்டோவுடன் பதவி, பணியாற்றும் இடம் மற்றும் பணியாற்றிய வழக்கு விவரங்களை குறிப்பிட்டு, பேனர் அச்சிட்டு மக்கள் பார்வைக்கு வைக்க எஸ்.பி., சஷாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த மாதம் சிறந்த முறையில் பணியாற்றியதாக இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (தாராபுரம்), ராஜேஸ்வரி (உடுமலை மகளிர் போலீஸ் நிலையம்), ஞானவேல் (தாராபுரம் போக்குவரத்து), எஸ்.ஐ., தவசியப்பன் (பெருமாநல்லூர்) மற்றும் அவிநாசி போலீஸ் நிலையத்தை சேர்ந்த, சிறப்பாக பணிபுரிந்த குற்ற தடுப்பு குழுவினர் எஸ்.ஐ., பார்த்திபன், ஹரிராஜ், ராஜா, வேணுகோபால் ஆகியோரின் புகைப்படம் மற்றும் குறிப்பு அச்சிட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X