search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

    தர்மபுரி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி ஒட்டப்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் கைகளில் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி பைகளில் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தர்மபுரி கலெக்ட்ரேட் முன்புள்ள பெரியார் நகரை சேர்ந்த சூர்யா (வயது25), அதகப்பாடி குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த கேசவன் (65) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×