என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திங்கள் முதல் வெள்ளி வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி-மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
Byமாலை மலர்8 Dec 2021 7:46 AM GMT (Updated: 8 Dec 2021 7:46 AM GMT)
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் கோவேக்சின், கோவிலீஷ்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 17 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமைதோறும் அனைத்து நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 60 வார்டுகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் கோவேக்சின், கோவிலீஷ்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொரோனாவில் இருந்து தங்களையும், சமுதாயத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக மாற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X