search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    புத்தாண்டு, பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்- பயணிகள் கோரிக்கை

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள் சென்னையில் அதிகம் பேர் வசதிப்பதால் பண்டிகை காலத்தை கருதி மேலும் சில சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்டிரல், எழும்பூரில் இருந்து இந்த ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன.

    தாம்பரத்தில் இருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இருமார்க்கமும் விடப்பட்டுள்ள இந்த சிறப்பு ரெயில்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஏ.சி. படுக்கை வசதி கொண்ட இடங்கள் ஒரு சில மட்டுமே காலியாக இருக்கின்றன.

    மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களும் முன்பதிவு செய்வதற்கு போதிய இடங்கள் இல்லாமல் தடுமாறுகிறார்கள்.

    பொதிகை எக்ஸ்பிரஸ்

    பொதிகை, கொல்லம், சிலம்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய முடியாத அளவு கூட்டம் உள்ளது. இந்த மாதம் இறுதி முதல் பொங்கல் முடிந்து திரும்பும் வரை ரெயில்களில் பயணம் செய்வதற்கு போதிய இட வசதி இல்லை.

    அதனால் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் சென்னையில் அதிகம் பேர் வசதிப்பதால் பண்டிகை காலத்தை கருதி மேலும் சில சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும்.

    எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செல்லும் வகையில் 23-ந் தேதி, புத்தாண்டுக்கு 31-ந்தேதி, பொங்கல் பண்டிகைக்கு, ஜனவரி 12, 13-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    பொங்கல் முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜனவரி 17, 18-ந் தேதிகளில் நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்களை விட வேண்டும் என்று சங்கரன் கோவில் எம்.எல்.ஏ. ராஜா மற்றும் தூத்துக்குடி ரெயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



    Next Story
    ×