என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் கீழ் முதன்முதலாக காளிப்பட்டி ஏரி நிரம்பியது
Byமாலை மலர்8 Dec 2021 4:23 AM GMT (Updated: 8 Dec 2021 4:23 AM GMT)
காளிப்பட்டி ஏரியின் கரைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவும், ஏரியில் குளிப்பவர்கள் கூட்டமாகவும் காட்சியளிக்கிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி திப்பம்பட்டி பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் அமைத்து, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை பம்ப் செய்து ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
முதலாவதாக மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் மூலம் காளிப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பி கண்கொள்ளாக்காட்சி அளிக்கிறது.
இதனை அறிந்த சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து இந்த ஏரியின் அழகை ரசித்து செல்கிறார்கள். ஒரு சிலர் ஏரியில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.
குறிப்பாக காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை இந்த ஏரியின் கரைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவும், ஏரியில் குளிப்பவர்கள் கூட்டமாகவும் காட்சியளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு காளிப்பட்டி ஏரி திடீரென சுற்றுலா தளமாக மாறியது போல் இருந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி திப்பம்பட்டி பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் அமைத்து, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை பம்ப் செய்து ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
முதலாவதாக மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் மூலம் காளிப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பி கண்கொள்ளாக்காட்சி அளிக்கிறது.
இதனை அறிந்த சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து இந்த ஏரியின் அழகை ரசித்து செல்கிறார்கள். ஒரு சிலர் ஏரியில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.
குறிப்பாக காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை இந்த ஏரியின் கரைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவும், ஏரியில் குளிப்பவர்கள் கூட்டமாகவும் காட்சியளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு காளிப்பட்டி ஏரி திடீரென சுற்றுலா தளமாக மாறியது போல் இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X