search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகைகள் கொள்ளை

    மதுரையில் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கூடல்புதூர் சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் சேகரன் (வயது 65). மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

    டாக்டர் சேகரன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 17½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் டாக்டர் சேகரன் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 17½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை அடையாளம் காண அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி, அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    டாக்டர் வீட்டில் பட்டப்பகலில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் கூடல் புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×