search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலை இல்லாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

    கோவை பி.என்.புதூர் அருகே வேலை கிடைக்காததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை பி.என்.புதூர் அருகே உள்ள கோகுலம் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வய 33). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமபட்டு வந்தார். இதனால் ராமச்சந்திரன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×