search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கலூர் கோவிலில் உழவாரப்பணி

    80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் கண்டியன்கோவில் ஊராட்சி சின்னாரியபட்டியில் மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.

    இதையறிந்த ஈரோடு - திருத்தொண்டீசர் உழவாரப்பணி குழுவை சேர்ந்த 80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
    Next Story
    ×