search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்
    X
    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

    அதிமுக தலைமைக்கான தேர்தல்-ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கு நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

    இதுதொடர்பாக அதிமுக தேர்தல் ஆணையாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. 

    அதிமுக தலைமை தேர்தல் முடிவு வெளியீடு

    இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே  4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    மேலும் அவர்கள் இருவரும் போட்டியிட வேண்டி, அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை அளித்தனர்.  இந்த வேட்புனுமக்கள் அதிமுக சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆம் தேதி முறையாக பரிசீலிக்கப்பட்டன.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட  வேண்டி ஒரே ஒரு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால்,  அதிமுக சட்டவிதிகளின்படி அவர்களுடைய மனு சரியாக உள்ளதாலும், நடைபெற்ற தேர்தலில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு  ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×