என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்6 Dec 2021 11:17 AM GMT (Updated: 6 Dec 2021 11:17 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே செல்லத்தாயார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்தாமஸ் மகன் அருள்ராஜ் (வயது 31). விவசாய வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் மின் விளக்குகளால் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார், அருள்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருள்ராஜ்க்கு அருள்செல்வி என்ற மனைவியும், பொன்திலீப் என்ற மகனும், பொன் ஹெலினா என்ற மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X