search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    குளித்தலை அருகே மது விற்ற 4 பேர் கைது

    குளித்தலை அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம், சுங்ககேட், பரளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அப்பகுதிகளுக்கு சென்ற குளித்தலை போலீசார் குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற அண்ணாவி (வயது 41), பரளி நால்ரோடு பகுதியில் மது விற்ற சிவக்குமார் (46), குளித்தலை சுங்ககேட் பகுதியில் மது விற்ற வடிவேல் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 19 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் நச்சலூர் தெற்கு தெரு பகுதியில் மதுவிற்ற பொன்னர் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×