search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதாவின்  உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

    திருப்பூரில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி

    திருப்பூர் போயம்பாளையம் நால்ரோடு சந்திப்பில் 20-வது வட்டக்கழகம் சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    திருப்பூர்: 

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர்  மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

    நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், மாவட்ட அணி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கண்ணபிரான், சுந்தராம்பாள், வக்கீல் முருகேசன், கலைமகள் கோபால்சாமி, கே.பி.ஜி.மகேஷ்ராம், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் போயம்பாளையம் நால் ரோடு சந்திப்பில் 20-வது வட்டக்கழகம் சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தப்பட்டது. 

    இதில் மாநில வீட்டுவசதி நலவாரிய சங்க இயக்குனர் சொர்க்கம் நீதிராஜன், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெகநாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் வட்டக்கழக அவைத் தலைவர் கனகராஜ் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×