search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விபத்தில் உதவுபவர்களுக்கு மத்திய அரசு விருது

    மத்திய அமைச்சக மதிப்பீட்டு குழு அனைத்து மாநில முன்மொழிவுகளை பரிசீலித்து ஆண்டுக்கு 10 நபர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது.
    திருப்பூர்:

    சாலை விபத்துகளில் சிக்கிய ஒருவர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நபரின் உயிரை காப்பாற்றியவருக்கு, இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் என்ற ‘குட் சமரிதான்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சக நெறிமுறைகளின்படி  விபத்தில் சிக்கியவர்களை  ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு எடுத்து சென்று உயிரை காப்பாற்றியவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

    போலீஸ் மற்றும் டாக்டர் தரப்பில் முன்மொழிவுகள் பெற்று மாவட்ட மதிப்பீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, போக்கு வரத்து கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். கமிஷனர் மூலமாக  தலா ரூ-5ஆயிரம்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    மத்திய அமைச்சக மதிப்பீட்டு குழு  அனைத்து மாநில முன்மொழிவுகளை பரிசீலித்து ஆண்டுக்கு 10  நபர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×