search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் 127 பேருக்கு கொரோனா

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கோவை:

    கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 121 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது.

    கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 111 பேர் நேற்று குணமடைந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 470 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×