என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விடிய விடிய கனமழை- நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்4 Dec 2021 4:50 AM GMT (Updated: 4 Dec 2021 4:50 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பின. சில இடங்களில் ஏரிகள் குறைந்த அளவு தண்ணீருடன் காட்சியளிக்கிறது. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. இதனிடையே இன்று அதிகாலை மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டியது.
தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காலையிலும் மழை பெய்ததால் அத்தியாவசிய பணிகள், மற்றும் அலுவலகங்கள், வேலைகளுக்கு செல்வோர் அவதிபட்டனர். விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.
திருச்செங்கோட்டில் 53 மி.மீ., ராசிபுரம் 48.30 மி.மீ., புதுச்சத்திரம் 38 மி.மீ., சேந்தமங்கலம் 19 மி.மீ., பரமத்திவேலூர் 15 மி.மீ., குமாரபாளையம் 11.40 மி.மீ., கலெக்டர் அலுவலக வளாகம் 1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. செம்மேட்டில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 283.80 மிமீ மழையும், சராசரியாக 23.65 மி.மீ. மழையும் பெய்துள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பின. சில இடங்களில் ஏரிகள் குறைந்த அளவு தண்ணீருடன் காட்சியளிக்கிறது. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. இதனிடையே இன்று அதிகாலை மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டியது.
தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காலையிலும் மழை பெய்ததால் அத்தியாவசிய பணிகள், மற்றும் அலுவலகங்கள், வேலைகளுக்கு செல்வோர் அவதிபட்டனர். விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.
திருச்செங்கோட்டில் 53 மி.மீ., ராசிபுரம் 48.30 மி.மீ., புதுச்சத்திரம் 38 மி.மீ., சேந்தமங்கலம் 19 மி.மீ., பரமத்திவேலூர் 15 மி.மீ., குமாரபாளையம் 11.40 மி.மீ., கலெக்டர் அலுவலக வளாகம் 1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. செம்மேட்டில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 283.80 மிமீ மழையும், சராசரியாக 23.65 மி.மீ. மழையும் பெய்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X