search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வலங்கைமான் அருகே இளம்பெண் தற்கொலை

    வலங்கைமான் அருகே வயிற்று வலியால் விஷம் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கொட்டையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிபாசு. இவருடைய மகள் சந்தியா (வயது 24). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவரது கணவர் இறந்து விட்டார்.

    இதனால் கொட்டையூர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சந்தியாவுக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சந்தியா, எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று விட்டார்.

    இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×