என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்3 Dec 2021 12:29 PM GMT (Updated: 3 Dec 2021 12:29 PM GMT)
திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி டி.குன்னத்தூரில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த நவம்பர் 20-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
போலீஸ் விசாரணையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பூலாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விக்ரமாதித்தன் மகன் பாபு (வயது 19) என்பவர் சிறுமி வேலை பார்த்த மில்லில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், சிறுமியை அழைத்துச் திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X