என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆதிதிராவிடர் நல விடுதியில் மாணவர் சேர்க்கை
Byமாலை மலர்3 Dec 2021 8:54 AM GMT (Updated: 3 Dec 2021 8:54 AM GMT)
நடப்பு கல்வியாண்டில் 6-ம்வகுப்பு முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை 8-ந்தேதி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 19 இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பின் செப்டம்பர் 1-ந்தேதி முதல் விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 6-ம்வகுப்பு முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை 8-ந்தேதி நடக்கிறது. தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பினர், விகிதா சார அடிப்படையில்தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஒரு விடுதிக்கு தலா 5 பேர் வீதம், இலங்கை தமிழர் குழந்தைகளும் சேர்க்கப்படலாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, தங்குமிடம், பாய், தலையணை, போர்வை, பாடப்புத்தகம், குறிப்பேடு, எழுது பொருட்கள் அரசால் இலவசமாக வழங்கப்படும்.
சாதிச்சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை , வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் போட்டோவுடன் இணைத்து வருகிற 6-ந்தேதி மாலைக்குள் விடுதி காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X