என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
Byமாலை மலர்3 Dec 2021 8:50 AM GMT (Updated: 3 Dec 2021 8:50 AM GMT)
முனியம்மாளுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகர் 9 வது வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ்(வயது 35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி முனியம்மாள் (30). இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கணவன் மனைவி - இருவரும் 3 சக்கர ஸ்கூட்டரில் பல்லடத்தில் இருந்து திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர் .
அப்போது பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். முனியம்மாளுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X