search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நச்சலூர், தோகைமலையில் பெட்டிக்கடைகளில் மது விற்ற 5 பேர் கைது

    நச்சலூர், தோகைமலையில் பெட்டிக்கடைகளில் மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்துள்ளது. இதையடுத்து, குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொய்யாமணி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 39), கோரப்பட்டி பகுதியில் ஜீவானந்தம் (52) ஆகியோரது பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தோகைமலையில் உள்ள பெட்டிக்கடைகளில் மது விற்றதாக கல்லடை ராஜலிங்கம் (45), கொசூர் ஊராட்சி கம்பளியாம்பட்டி ராஜம்மாள் (55) கீரனூர் ஊராட்சி ஊமை உடையனூர் காமராஜ் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×