என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மண்டலம் நேற்று உருவாகியது.
இதன் எதிரொலியாக பாக் ஜலசந்தி-மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதன் தாக்கமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கி அலைகள் அடித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் நங்கூர மிட்டு பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடலோரப் பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீன்துறை அதிகாரிகள் அறிவித்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்