என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலைகளை சீரமைக்க விரைவாக நிதி ஒதுக்குங்கள்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
Byமாலை மலர்2 Dec 2021 10:30 AM GMT (Updated: 2 Dec 2021 10:30 AM GMT)
மோசமான நிலையில் உள்ள நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி விஜய் வசந்த் எம்.பி. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார்.
அப்போது குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்குமாறு கேட்டு கொண்டார். நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சாலையின் குண்டு குழிகள் காரணமாக விபத்துகளும் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
2017 முதல் கடந்த நான்கு வருடங்களாக சாலை பராமரிப்பு பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருப்பதை எடுத்துரைத்த விஜய் வசந்த் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டு கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X